Showing posts with label ncbh. Show all posts
Showing posts with label ncbh. Show all posts

Saturday, September 10, 2011

என்சிபிஎச் சார்பில் 25 புத்தகங்கள் வெளியீடு

செப்டம்பர் 10 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் புத்தகக் கண்காட்சி அரங்கில் என்சிபிஎச் சார்பில் 25 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நந்தகோபால் நுால்களை வெளியிட்டார். மாவட்டக் கருவுல அதிகாரி முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார். என்சிபிஎச்சின் முதன்மை செயன்மையர் சண்முகம் சரவணன் வரவேற்றார்.

பேராசிரியர் ந.முத்துமோகன் இராஜபாளையம் நவபாரத் பள்ளி தாளாளர் நவபாரத் நாராயணராஜா வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் அ.பிச்சையின் சங்க இலக்கிய யாப்பியல் புத்தகம் குறித்து பேராசிரியர் இராம.சுந்தரம் கே.என்.பணிக்கரின் என் வாழ்க்கை குறித்து பேராசிரியர் போத்தி ரெட்டி எஸ்.அர்ஷியாவின் சிறுகதைகள் குறித்து பேராசிரியர் சு.வேணுகோபால் மேலாண்மை பொன்னுச்சாமியின் உயிர்நிலம் நாவல் குறித்து தோழர் எஸ்.ஏ. பெருமாள் சி.சொக்கலிங்கத்தின் பண்பாட்டு அரசியல் குறித்து பேராசிரியர் பா.ஆனந்தகுமார் ஆகியோர் சிறப்பாகப் பேசினர்.

என்சிபிஎச் மதுரை மண்டல மேலாளர் அ.கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார்.